நான் ரசித்த சில கவிதைகள்

ரொம்ப நாளாவே என்னோட மனசுல ஒரு சின்ன நெனப்பு ஓடிகிட்டு இருக்கு. பழைய தமிழ் பாடல்களை கொஞ்சம் புரியற மாதிரி explain செய்யலாம்னு. முடிஞ்ச வரை try பண்ணலாம்னு நினைச்சேன். அதோட விளைவு தான் இந்த blog.

Saturday, August 12, 2006

This blog has moved to wordpress

I've moved this blog to wordpress. Please change your bookmarks to here

Friday, June 09, 2006

பெண்கள் அகராதி

இங்க எதாச்சும் எழுதி ரொம்ப நாளாச்சி. அது ஒண்ணுமில்லீங்க கால் கட்டு போட்டுகிட்டேன். ஆஸ்பித்திரி போய் போடற கட்டு இல்லீங்க. இது வேற கால் கட்டு. ஹீஹீ.

Assembly, C, C++, Java, C# இப்படி என்ன language-ல வேணும்னாலும் program குடுங்க, எவ்வளவு complex-ஆ இருந்தாலும் சும்மா பின்னி எடுத்துடுவேன். ஆனா இந்த பொண்ணுங்க பேசறதுல ஒரு lineக்கு அர்த்தம் கேளுங்க, பேந்த பேந்த முழிப்பேன். அது என்னமோ போங்க, இந்த பொண்ணுங்களுக்கு எதையும் நேரா சொல்ல தெரியாது. எதாச்சும் சொல்லிபுட்டு அப்புறம் அது நமக்கு புரியலைன்னு சொன்னா மொகட்டுலயே ஒரு குத்து வேற. ஒரு பொண்ணு 'இது' சொன்னா 'அது' அர்த்தம்னு யாராச்சும் பெண்கள் அகராதின்னு ஒண்ணு எழுதினா எவ்வளவு நல்லா இருக்கும்?

கலிங்கத்துப் பரணில செயங்கொண்டார் இத அழகா சொல்லறார்:


'விடுமின் எங்கள்துகில்! விடுமின்!' என்று முனி
வெகுளி மென்குதலை 'துகிலைப்
பிடிமின்' என்ற பொருள் விளைய நின்றருள்செய்
பெடைந லீர்! கடைகள் திறமினோ!


விளக்கம்:

கணவன் உங்கள் ஆடையை பற்றி இழுக்கையில், விடுங்கள், விடுங்கள் என்று நீங்கள் சொல்லும் வார்த்தைக்கு உண்மையான அர்த்தம், 'இழுங்கள் இழுங்கள்' என்பதே. இப்படி பொய்க்கோபம் காட்டும் பெண்களே கதவுகளை திறங்கள்.

இதயே ஷாஜகான் படத்துல, 'போ, போ, போ என்று சொல்லுக்கு வா, வா, வா என்று அர்த்தமே'-ன்னு ரொம்ப சிம்பிளா 'மே மாத மேகம்' பாட்டுல சொல்றாங்க!

Sunday, November 20, 2005

மரமும் யானையும்

போன வாரம் எங்க டீம்ல பசங்க சேர்ந்து ஆபீசுக்கு பக்கதுல ஒரு கடைல காபி குடிக்க போயிருந்தோம். பக்கதுல ஒரு கடைல ஒரு அழகான வாட்ச் வெச்சு இருந்தாங்க. பீர் பாட்டில் மாதிரி ஒரு ஷேப்ல இருந்துச்சு. பசங்க அதை பார்ததும் இது என்னான்னு தெரியுதான்னு கேட்டாங்க. பீர் பாட்டில்ன்னு சொன்னேன். சிரிச்சுகிட்டே பசங்க சொன்னானுக, 'எங்களுக்கு அதுல ஒரு வாட்ச் தெரியுது, உனக்கு அங்க ஒரு பீர் பாட்டில் தெரியுது. எல்லாம் பாக்கறவங்க கண்ணை பொறுத்துதான்'. யோசிச்சு பார்த்தா எவ்வளவு சரின்னு புரியுது. நம்ம அத பீர் பாட்டில்ன்னு பார்தா அதுல இருக்கற வாட்சோட அழகு தெரியாது. அத வாட்ச்ன்னு பார்த்தா அதுல இருக்கற பீர் பாட்டில் தெரியாது. இதயே தான் திருமூலர் திருமந்திரம்ல சொல்லறார்:


மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்


விளக்கம்:

யானை சிலை ஒண்ணு ரொம்ப தத்ரூபமா மரத்துல செஞ்சு வெச்சிருக்காங்க. அதை மரம்ன்னு பார்த்தா அதுல இருக்குற யானை தெரியாது, அதை யானைன்னு பார்க்கும் போது அதுல மரம் தெரியாது. யானை வேற மரம் வேற இல்ல. ரெண்டும் ஒண்ணுதான்; பார்கறவங்க கண்ணை பொறுத்து தான் எல்லாமே. பஞ்ச பூதங்கலால ஆன இந்த உலகமும், பரமாத்மாவும் அப்படிதான். பார்கறவங்க கண்ணுக்கு எப்படி தெரிந்தாலும் அது ரெண்டும் ஒண்ணு தான்

Sunday, October 09, 2005

ஊரு விட்டு ஊரு வந்து ...

பெங்களூர் எனக்கு ரொம்ப பிடிச்ச இடம். அதை பெண்களுர் அப்டின்னு கூட செல்லமா சொல்லுவோம்ங்க. சென்னைல வேலை கிடைகறதுக்கு முன்னாடி கிட்ட தட்ட ஒரு 6 மாசம் அங்க தான் தங்கி இருந்தேன். என்னமொ தெரியல எனக்கு அந்த இடம் ரொம்ப பிடிச்சி போச்சுங்க. இப்பொ 3 வருசம் சென்னைல இருந்திட்டு திரும்பவும் அங்க போக போறேன். ஒரு ஊருன்ன என்ன இருக்கணும்? இதுக்கு பொதுவான பதில் கிடையாது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி தோணும். climate நல்லா இருக்கனும்; நெறைய shopping complex இருக்கனும்; குண்டும் குழியும் இல்லாத road இருக்கனும்; பக்கத்துல picnic போற மாதிரி நெறைய இடம் இருக்கனும் - இது எனக்கு. இந்த மாதிரி, குற்றால குறவஞ்சியில, குறத்தி அவளோட நாட்டை பத்தி சொல்லுறதை கேளுங்க:



நீங்க காண்பது சேர்ந்தவர் பாவம்
நெருங்க காண்பது கன்னலிற் சென்னெல்
தொங்க காண்பது மாம்பழ கொத்து
சுழல காண்பது பூந்தயிர் மத்து
வீங்க காண்பது மங்கயர் கொங்கை
வெடிக்க காண்பது கொல்லையின் முல்லை
ஓங்க காண்பது மங்கல பேரிகை
ஈசர் ஆரிய நாடெங்கள் நாடே


விளக்கம்:

ஈசரோட எங்க நாட்டுல கரும்பும் நெல்லும் அடர்த்தியா வளர்ந்திருக்கும்; மாம்பழம் கொத்து கொத்தா காச்சிருக்கும்; தயிர் மத்து சுத்திகிட்டு இருக்கும்; பெண்களின் மார்பு பெரிசா இருக்கும்; கொல்லைபுறத்துல முல்லை பூ பூத்து வெடிச்சு கிடக்கும்; மஙகலமான பேரிகை சத்தம் நல்லா பலமா கேக்கும். மொத்தத்துல எஙக நாட்டுக்கு வந்து சேர்ந்தவஙலோட பாவம் நீங்கி போகும்.