நான் ரசித்த சில கவிதைகள்

ரொம்ப நாளாவே என்னோட மனசுல ஒரு சின்ன நெனப்பு ஓடிகிட்டு இருக்கு. பழைய தமிழ் பாடல்களை கொஞ்சம் புரியற மாதிரி explain செய்யலாம்னு. முடிஞ்ச வரை try பண்ணலாம்னு நினைச்சேன். அதோட விளைவு தான் இந்த blog.

Friday, September 30, 2005

பீர் பாட்டில் தத்துவம்

என்னோட computer வேலை செய்யலை. இப்போ Sree-யோட லாப்டாப்ல type பண்ணறேன். நான் வேற கவிதை எதுவும் post பண்ணாததுக்கு computer வேலை செய்யாதது மட்டும் காரணம் இல்லை, என்னோட சோம்பேரித்தனமும் கூடத்தான். நான் பரவாயில்ல, ஏதோ கொஞ்சம் break விட்டாலும் மறுபடியும் ஆரம்பிச்சுட்டேன். இன்னும் சில பேர் இருக்காங்க, நெறய விசயம் ஆரம்பிப்பாங்க, ஆனா அதுக்கு அப்புறம் அத அப்படியே கிடப்புல போட்டுடுவாங்க. இதை அழகா Beer Bottle Principle அப்படின்னு சொல்லுவாங்க.

அதாவது நல்லா குலுக்கி விட்டு பீர் பாட்டி்ல தொறந்து பாருங்க. சும்மா புஸ்ஸுன்னு
பொங்கி வழியும். எல்லாம் ஒரு ரெண்டு மூணு secondக்கு தான். அப்புறம்
எல்லாம் வடிஞ்சு போயி, ஒண்ணும் இல்லாம அமைதி ஆயிடும். மக்களும் இது மாதிரி தான். தடபுடலா ஆரம்பிச்சுட்டு அப்புறம் அப்படியே விட்டுடுவாங்க. இதை தான் வள்ளுவர் அழகா சொல்லுறார்:


உடைதம் வலியறியதார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கன் முறிந்தார் பலர்


விளக்கம்:
நெறயா பேர் ஒரு விசயத்த ஆரம்பிக்கற்துக்கு முன்னாடி, தன்னால அது முடியுமான்னு யோசிக்காம சும்மா குருட்டு நம்பிக்கைல ஆரம்பிச்சிட்டு, அப்புறம் அந்த விசயத்தை முடிக்காம விட்டுருவாங்க.

0 Comments:

Post a Comment

<< Home